"ஐ திங்க் பிங்க்" புற்றுநோய் மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்த சந்திப்பு நடைபெற்றது

கோவை ரோட்டரி கிளப், தி ஆர்க் பவுன்டேஷனுடன் இணைந்து புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை "ஐ திங்க் பிங்க்" என்ற பெயரில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.



குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் கார்த்திகா சிவப்பிரகாசம் மகளிரை பாதிக்கும் புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துள்ளது. முன்னொரு காலத்தில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது இளம்பெண்களையும் இந்த நோய் விட்டுவைப்பது இல்லை.

ஆரப்பத்திலேயே கண்டறிவதன் மூலம் இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம். வருடத்திற்கு ஒரு முறை பெண்கள் புற்றுநோயை கண்டறிவதற்கான ஆய்வுகளுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார். 

இதுகுறித்து பிஎஸ்ஜி மருத்துவமனை மருத்துவர் மதுலிகா விஜயகுமார் கூறுகையில், "வருமுன் காப்பதே சிறந்தது". இந்த நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வதில் சிறந்த முறை என்பது தடுப்பூசிகளை பயன்படுத்துவதே ஆகும். மேற்கு நாடுகளில் எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்குக் கூட தடுப்பூசிகள் பயன்படுத்துவது தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் இதுவரை இது பிரபலமாகவில்லை என கூறினார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து நடந்த கேள்வி- பதில் நிகழ்ச்சியில் மாணவிகளின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்தனர்.

அப்போது ஒரு மாணவி, புற்றுநோய் என்பது பரம்பரை நோயா என தனது ந்தேகத்தை எழுப்பினார். அதற்கு பதிலளித்த மருத்துவர் கார்த்திகா, "சில வகை புற்றுநோய்கள் பரம்பரை நோயாக இருக்கும். புற்றுநோய் பாதித்த நோயாளிகளை பரிசோதிக்கும் பொழுது நாங்கள் அவருடைய குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்வோம்" என்றார்.

வேரொரு மாணவி புற்றுநோயை கீமோதெரபி சிகிச்சை மூலம் முற்றிலுமாக குணமாக்க முடியுமா என கேட்டார். அதற்கு பதிலளித்த மருத்துவர் கார்த்திகா கூறுகையில், அது புற்றுறோயால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் இருப்பதை எந்த நிலையில் கண்டறிகிறோம் என்பதைப் பொருத்து கீமோதெரபி அளிக்கப்படும். இதன் மூலம் 90 முதல் 95 சதவிகிதம் வரை புற்றுநோயை குணப்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. இதனால், நோயாளியின் ஆயுள் கூடுகிறது. ஆனால், புற்றுநோய் மருவடியும் வருமேயானால் அது பிரச்சனைகளை உருவாக்கும்" என்றார்.

எந்த வயதில் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என மாணவிகள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் மதுலிகா, முந்தைய காலங்களில் 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனால் தற்போது இப்புற்றுநோய் இளம் வயது பெண்களிடத்திலும் வரத்துவங்கியுள்ளது. என்னிடம் 28 வயதே ஆன பெண் ஒருவர் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி முடிந்தவுடன் தஸ்லிமா நஷ்ரீன் என்னும் திருநங்கை தனது மேடைக்கு வந்து அவருடைய வாழ்க்கை மற்றும் பயணங்கள் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். அவர் மாணவிகளை மூன்றாம் பாலின்த்தவர்களின் முன்னேற்றத்திற்கான பணிசெய்யுமாறு அறிவுருத்தினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...